அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி உடனடியாகவும், மிக விரைவாகவும் நீதிமன்றங்களில் பதில் மனு மற்றும் விளக்க மனுக்களை தாக்கல் செய்தார்.

ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தாங்கள் தாக்கல் செய்த சிவில் வழக்கு மற்றும் இடையீட்டு மனுக்களில் 18 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது வரையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் ஒரு பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. அதிமுக கட்சி மற்றும் பொதுச்செயலாளர் நியமனம் ஆகியவை தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வரும் வரையில், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்த இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு appeared first on Dinakaran.

Related Stories: