இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காமநாயக்கன்பாளையம் போலீசார், நேச பிரபுவை மீட்டு மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரவீன் (27), திருப்பூர் கே.வி.ஆர்.நகரை சேர்ந்த சரவணன் (23) ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ‘திருப்பூர் வீரபாண்டி அய்யம்பாளையம் பகுதியில் பாலியல் தொழில் நடந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கு நேச பிரபு செய்தி சேகரிக்க சென்றபோது அங்கிருந்த சபரி விஜய் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தும் இருக்கும்’ என்று தெரியவந்துள்ளது.
The post தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது: மேலும் சிலருக்கு தனிப்படை போலீசார் வலை appeared first on Dinakaran.