இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்தனர். அந்த தீர்ப்பில்,”விநாயகர் சிலை கரைப்பால் நீர் நிலை மாசடைவது மட்டுமின்றி கரையாத பாகங்களை எடுக்க வேண்டிய சுமை அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத நீர் நிலைகளில் சிலை கரைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.
எனவே விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகள் கரைப்புக்கு அனுமதிதர கட்டணம் நிர்ணயிக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை செயலர் தலைமையிலான குழுவுக்கு உத்தரவிடுகிறோம்.சிலைகளின் உயரத்திற்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அனுமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர்நிலைகள் பராமரிப்புக்கு செலவிட வேண்டும். அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் குறித்து விநாயகர் சதூர்த்தி வரும் 3 மாதங்கள் முன்பே விளம்பரப்படுத்தவும் ஆணையிடப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தனர்.
The post விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகள் கரைப்புக்கு அனுமதிதர கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் : பசுமை தீர்ப்பாயம் appeared first on Dinakaran.