விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடி: கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சேசுராஜ் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் அரசப்பன் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் திருஞானம் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர். தமிழகத்தில் பேரூராட்சி நகராட்சி பகுதிகளுக்கு 100 நாள் வேலைகளை வழங்கிட வேண்டும். ஒன்றிய அரசு போதுமான நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

The post விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: