இதை ஏற்று கொண்ட நீதிபதிகள், அந்த பணிகளை திட்டமிட்டபடி முடிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர். பணிகள் நிறைவடைந்தது குறித்த அறிக்கையை மார்ச் 25 தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், மனுதாரர் தரப்பில், மாமல்லபுரம், கூத்தம்பாக்கம், வெண்பாக்கம், வரதராஜபுரம் ஆகிய நான்கு இடங்களில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், இந்த பேருந்து நிலையங்களிலும் மாற்று திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைக்க வேண்டும் எனவும், கட்டுமான பணிகளை குழு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
The post கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுக தடையாக உள்ள குறை சரி செய்யப்படும்: ஐகோர்ட்டில் சிஎம்டிஏ உத்தரவாதம் appeared first on Dinakaran.