தைப்பூசத்திற்கு சிறப்பு பஸ்கள்

கோவை, ஜன. 24: ேகாவை அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ தைப்பூசம், குடியரசு தின விழா மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களான 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து மருதமலை, பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி செல்லவும், மீண்டும் கோவைக்கு திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடங்களில் கூடுதலாக 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தைப்பூசத்திற்கு சிறப்பு பஸ்கள் appeared first on Dinakaran.

Related Stories: