நீதிமன்றம் திறப்பு விழா அமைச்சர் பெயர் புறக்கணிப்பு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம், முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விழா அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புறக்கணிப்பட்டு அச்சிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமாவிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் முறையிட்டனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘குறுகியகாலம் இருப்பதால் அழைப்பிதழை திருத்தம் செய்ய முடியாது. உயர்நீதிமன்ற பதிவாளர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நீதிபதி தெரிவித்தார். அமைச்சருக்கு உரிய பிரதிநிதித்தும் ொடுக்காவிட்டால் இந்நிகழ்ச்சியை நாங்கள் புறக்கணிக்கபோம்’ என்று தெரிவித்தனர்.

The post நீதிமன்றம் திறப்பு விழா அமைச்சர் பெயர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: