சாயர்புரம் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

ஏரல், ஜன. 24: சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜாபிந்த் முன்னிலை வகித்தார். சாயர்புரம் பாஸ்ட்ரேட் சேர்மன் மனோகர் ஆரம்ப ஜெபம் செய்தார். விழாவில் கல்லூரி முன்பு சமத்துவ பொங்கலிட்டு அனைவரும் கொண்டாடினர். தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், திருமண்டல உயர் கல்வித்துறை மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர். விழாவில் கல்லூரி முன்னாள் டீன் ஐசக் பாலசிங், சாயர்புரம் போப் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜெயரட்சகர், புதுக்கோட்டை பஞ். தலைவர் ஜேக்சன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post சாயர்புரம் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: