சிஎம்டிஏவின் 277வது குழும கூட்டம் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்து முடிவு

சென்னை: சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 277வது குழுமக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சரால் 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த குழுமக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், தாயகம் கவி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சமயமூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிஎம்டிஏவின் 277வது குழும கூட்டம் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்து முடிவு appeared first on Dinakaran.

Related Stories: