ஒவ்வொரு இந்துவுக்கும் வழிபாடு செய்ய உரிமை உண்டு: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ராமபஜனை மற்றும் வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பிரதமர் பங்கேற்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் அனைவரும் பார்க்க விரும்புகின்றனர். கோயில்களில் ஒவ்வொரு இந்துவுக்கும் வழிபாடுகளை மேற்கொள்ள உரிமை உண்டு என்றார்.

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கண்டுகளிப்பதற்காக அமைக்கப்பட்ட எல்இடி திரைகளை அகற்றியது தொடர்பாக மாவட்ட எஸ்பி சண்முகம் கூறுகையில், காமாட்சியம்மன் கோயிலில் பஜனை மற்றும் பல்வேறு வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டு உள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை எல்இடி திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என ஏற்கெனவே கடிதம் கொடுத்திருந்தனர். கோயில்களில் பஜனை, அன்னதானம், சிறப்பு வழிபாடு நடத்த எவ்வித தடையும் இல்லை என்று தெரிவித்தார்.

The post ஒவ்வொரு இந்துவுக்கும் வழிபாடு செய்ய உரிமை உண்டு: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: