அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்கு சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். அயோத்தி ராமர்கோயில் குடமுழுக்கு முடிந்தபின்னரே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என காவல்துறையினர் விளக்கமளித்தனர். ராகுல் காந்தியை கோவிலுக்குள் அனுமதிக்காததால் காங்கிரஸ் கட்சியினர் போலீசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.