மாவட்ட அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி

பெரியகுளம், ஜன. 21: பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி, பெரியகுளம் துரை ராம சிதம்பரம் நினைவு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில், பிடிசி நினைவு கூடைப்பந்து அணி, நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி அணி, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி அணி, ஹூப்ஸ்டார் போடி அணி, ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி அணி, நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி அணி,உள்ளிட்ட பல்வேறு அணிகள் கலந்து கொள்கின்றன. நேற்று நடந்த முதல் போட்டியில், பிடிசி நினைவு கூடைப்பந்து கழக அணியும், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி அணியும் விளையாடின. இதில் பெரியகுளம் பிடிசி நினைவு கூடைப்பந்து கழக அணி வெற்றி பெற்றது. 2வது போட்டியில் ஹூப் ஸ்டார் போடி வென்றது

The post மாவட்ட அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: