இதைக் கண்டித்து கேரளா முழுவதும் கலவரம் வெடித்தது. இதற்குப் பின்னர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வேறு எந்த இளம்பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்யவில்லை. இளம்பெண்கள் தரிசனத்திற்கு சென்றால் பிரச்னை ஏற்படும் என்பதால் போலீசாரும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சபரிமலையில் மீண்டும் 2 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக இன்ஸ்டாகிராமில் தகவல் பரவி வருகிறது. 18ம் படி அருகே நின்றுகொண்டு அந்த இளம்பெண்கள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படமும் அதில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த போட்டோ உண்மை இல்லை என்றும், இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு வரவில்லை என்றும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பத்தனம்திட்டா சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். போட்டோவையும், தகவலையும் பரப்பியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
The post சபரிமலையில் மீண்டும் இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி: கேரள சைபர் கிரைம் போலீசார் வழக்கு appeared first on Dinakaran.