சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் பெண் டிஐஜி சாட்சியம்

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு, சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் காவல்துறை நிர்வாக பிரிவு டிஐஜி ஆனி விஜயா விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. 2 நாட்கள் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதையடுத்து காவல்துறை தலைமையக நிர்வாக பிரிவு டிஐஜி ஆனி விஜயா நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று இவ்வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஐஜி ஆனி விஜயா நேரில் ஆஜராகி  ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாட்சியம் அளித்துவிட்டு சென்றார். குற்றம் சாட்டப்பட்ட எஸ்.பி. கண்ணன் நேரில் ஆஜராகியிருந்தார். டிஜிபி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து 4, 5வது சாட்களிடம் விசாரணை நடத்த வரும் 25ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். …

The post சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் பெண் டிஐஜி சாட்சியம் appeared first on Dinakaran.

Related Stories: