புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 6 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன, 141 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் 32 பேர் காயமடைந்த நிலையில் 12 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.