மேலும், கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில், குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி கடற்கரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன்பேரில், D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உழைப்பாளர் சிலை முதல் கண்ணகிசிலை வரையிலுள்ள கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 23 குழந்தைகள், D-5 மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 2 குழந்தைகள் மற்றும் J-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 2 குழந்தைகள் என மொத்தம் காணாமல் போன 27 குழந்தைகள் சென்னை பெருநகர காவல் குழுவினரால் மீட்கப்பட்டு, பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
The post காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை பகுதியில் காணாமல் போன 27 குழந்தைகள் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைப்பு! appeared first on Dinakaran.