உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 7வது சுற்று முடிவில் 3 வீரர்கள் முதலிடம்..!!

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 7ஆவது சுற்று முடிவில் 3 வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர். சிவகங்கை அபிசித்தர், குன்னத்தூர் திவாகர், கருப்பாயூரணி கார்த்திக் தலா 11 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 7வது சுற்று முடிவில் 573 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 183 காளைகள் பிடிபட்டன.

The post உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 7வது சுற்று முடிவில் 3 வீரர்கள் முதலிடம்..!! appeared first on Dinakaran.

Related Stories: