விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காயம்பட்ட காளைகளுக்கு முதல் உதவி செய்ய கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். பின்னர் ஆட்சியர் தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

ஜல்லிக்கட்டில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. உயிரிழப்புகள் இல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்த அதிநவீன வசதிகளை கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. 25 மருத்துவர்கள், 102 மருத்துவப் பணியாளர்கள் தலைமையில் சிறப்பு மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளன.

 

The post விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள் appeared first on Dinakaran.

Related Stories: