நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை வென்றெடுக்க மிழர்கள் உறுதியேற்க திருமாவளவன் வேண்டுகோள்

நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை வென்றெடுக்க மிழர்கள் உறுதியேற்க திருமாவளவன் வேண்டுகோள்சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ண்டு முழுவதும் அவ்வப்போது பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடினாலும் ‘தமிழர் திருநாள்’ என அழைக்கப்படும் ஒரே பண்டிகை பொங்கல் விழா மட்டுமே. புராணக் கதைகளின் பின்னணி ஏதுமில்லாமல் உழைப்பையும் உறவையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு காலம் காலமாகக் கொண்டாடப்பட்டுவரும் உன்னதத் திருவிழாவே பொங்கல்விழா. மனிதகுலம் வாழ்வதற்கேற்ற தட்பவெப்பத்தை அளித்து, விவசாய விளைச்சல்களுக்கு பேராதாரமாக விளங்கும் கதிரவனுக்கும், விவசாயிகளுக்கு உற்றத்துணையாய் உழைக்கும் உழவுமாடுகளுக்கும் நன்றிசெலுத்தும் விழாக்களாகும்.

இப்படி உழைப்பைப் போற்றும் திருவிழாதான் தமிழர்கள் போற்றும் தமிழினத்தின் பொங்கல் திருவிழா. இந்நாளில் தமிழக மக்கள் ஓர் உறுதிமொழியை ஏற்க வேண்டும். அதாவது, நடைபெறவிருக்கிற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் சாதியவாத, மதவாத, சனாதன சக்திகளை வீழ்த்தி சனநாயகத்தை வென்றெடுக்க ஒட்டுமொத்தத் தமிழர்களும் உறுதியேற்போம். இதுவே இந்த பொங்கல் திருநாளில் தமிழ்ச் சமூகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் விடுக்கும் அறைகூவலாகும்.

 

The post நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை வென்றெடுக்க மிழர்கள் உறுதியேற்க திருமாவளவன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: