திருவண்ணாமலையில் 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

தி.மலை: திருவண்ணாமலையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழம் மற்றும் 500 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண்ணாமலை தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது.

The post திருவண்ணாமலையில் 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: