மேலும் அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மாநில அரசு ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15 ரூபாய் வீதம் நிதி ஒதுக்குகிறது. இந்த நிதியால் அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் முதல் அரிசி பருப்பு வரை அனைத்தும் உயர்ந்துள்ளது. ஆகவே ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 ரூபாய் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.
The post ஸ்ரீகாளஹஸ்தியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒற்றைகாலில் நின்றபடி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.