இல்லையென்றால் தொண்டர்கள் ஒன்றுகூடி ஓட, ஓட விரட்டும் காலம் கனிந்து வருகிறது. நான்கரை ஆண்டு நீ பதவியில் நீடிக்க முழு முதற் காரணம் மோடி. அதை மறந்து கூட்டணி இல்லையென்று சொல்கிறாய். அனைவரும் சேர வேண்டும் என தலைவர்கள் கூறுவார்கள். ஆனால், உலகத்திலேயே பிரிந்தே இருக்க வேண்டும் எனக் கூறும் ஒரே நபர் நீதான். எல்லோரும் இணைய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தொண்டர்கள் விருப்பம். இதனை உணர்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் இல்லையெனில் அரசியலில் இருந்தே தொண்டர்கள் தூக்கி எறிவர். எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
* என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்
தேனியில் ஓபிஎஸ் கூறுகையில், ‘சுப்ரீம் கோர்ட் அனைத்து அம்சங்களையும் கேட்டு தீர்ப்பு வழங்குவதற்கு ஜன. 19ம் தேதிக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. அதிமுக ரத்தம் என்னுடைய உடம்பில் ஓடுகிறது. நீதிமன்ற தீர்ப்பின் மூலம் எங்களுடைய வேட்டி, துண்டு, கொடியை மாற்றலாம். ஆனால், எங்களின் உடம்பில் இருக்கும் அதிமுக ரத்தத்தை யாராலும் மாற்றவே முடியாது. இது தற்காலிக தீர்ப்புதான். சிஏஏ சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க எடப்பாடி பழனிசாமி தான் எம்.பி.க்களை அனுப்பி வைத்தார். நிலைமைக்கு தகுந்த மாதிரி இப்போது பேசுகிறார். அவர் வாயில் சொல்வது எல்லாம் பொய். நம்பாதீர்கள்’ என்றார்.
* துரோகி ஜெயக்குமார்
‘முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை உணவு கொடுத்த நண்பருக்கே துரோகம் செய்து இருக்கிறார். காலம் வரும்போது நான் பதில் சொல்வேன். நான் சொன்ன பதில் அவருக்கு புரியும்’ என்று ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.
The post மோடி இல்லையென்றால் முதல்வராகி இருக்க மாட்டார் எடப்பாடியை ஓட ஓட விரட்டும் காலம் வந்துவிட்டது: கொந்தளித்த ஓபிஎஸ் appeared first on Dinakaran.