முழுமையாக கட்டி முடிக்கப்படாத கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படுவதும் அங்கு ராமர் சிலையை வைப்பதும் தவறான வழிமுறை என குறிப்பிட்டுள்ள அவர், ராமர் கோவில் திறப்பு விழாவை இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று சாடியுள்ளார். இதே போல் இந்து மத வேதங்களுக்கு எதிராக திறப்பு விழா நடைபெறுவதாகவும், இத்தகைய விழாவில் பங்கேற்க தனது கவுரவம் இடம் தராது என்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நிஷ்சலானந்த சர்ஸ்வதியும் குற்றம் சாட்டியுள்ளார். உரிய முறைப்படி ராமர் சிலை நிறுவப்படாவிட்டால் அந்த பகுதியே அழியும் ஆபத்து உள்ளதாக அவர் எச்சரித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் மூலம் வருங்காலத்திலும் மத நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் தலையிடுவார்கள் என்றும் தங்களை யோகிகள் என்றும் தர்மாச்சாரியார்கள் என்றும் அரசியல்வாதிகள் விளம்பரம் செய்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிருங்கேரி சாரதா பீடத்தின் சுவாமி பாரதிகிருஷ்ணா தீர்த்தர், துவாரகா பீடாதிபதி சதானந்த சரஸ்வதி ஆகியோரும் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த 2500 ஆண்டுகளாக இந்து மதத்தின் முக்கிய மையங்களாகத் திகழும் சங்கராச்சாரியார்கள் புறக்கணிப்பால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சங்கராச்சாரியார்களின் நிலைபாடு குறித்து ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் விளக்கம் அளித்துள்ளார். அதில், அயோத்தி ராமர் கோயில் ராமருக்கே சொந்தமானது, சைவ, சாக்கிய, சன்னியாசிகளுக்கு சொந்தமானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
The post உரிய முறைப்படி ராமர் சிலை நிறுவப்படாவிட்டால் அந்த பகுதியே அழியும் ஆபத்து : சங்கராச்சாரியார்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.