மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளார்.
இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள நிலையில், பூட்டர் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்த அவரது கூட்டாளிகள் தங்கவேலு, சதீஷ், ராம் கணேஷ் தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவான 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
The post சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கூட்டாளிகள் 3 பேர் தலைமறைவு! appeared first on Dinakaran.