மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் வசூல் செய்யப்படும் நன்கொடைகள், தங்கக்காசு வழங்குவதில் முறைகேடு என வழக்கு தொடரப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒரு ரூபாய் கூட பணமாக பெறுவதில்லை. விழா கமிட்டினர் முறைகேடு செய்தால் போலீஸ் மூலம் வழக்கு பதிந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பின் உறுதிமொழியை ஏற்று மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
The post ஜல்லிக்கட்டு முறைகேடு செய்தால் போலீஸ் மூலம் வழக்கு பதிந்து குற்றவியல் நடவடிக்கை: அரசு appeared first on Dinakaran.