அதேசமயம் இரண்டாவது சீசன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. இச்சமயங்களில் தமிழகத்தின் சுற்றுலா பயணிகளை காட்டிலும் வெளி மாநில சுற்றுலா பயணிகளை அதிகளவு வருவார்கள். இந்நிலையில், முதல் சீசனுக்காக தற்போது பூங்கா தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், 35 ஆயிரம் தொட்டிகள் நாற்று நடவு பணிகளுக்காக தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
சிறிய புல் மைதானத்திலேயே இந்த மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், முதல் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள புல் மைதானங்களில் விளையாடி செல்ல ஏற்றவாறும் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது பூங்காவில் உள்ள பெர்ன் புல் மைதானம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. தினமும் புல் மைதானங்களிலும் தண்ணீர் பாய்ச்சி சமன் செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த புல் மைதானங்களுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post தாவரவியல் பூங்காவில் பெர்ன் புல் மைதானம் மூடல் appeared first on Dinakaran.