விருதுநகர் மாவட்டத்தில் காலை முதல் தொடர் சாரல் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 

விருதுநகர்,ஜன. 10: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு மி.மீ வருமாறு: திருச்சுழி 4, ராஜபாளையம் 37, காரியாபட்டி 11.20, திருவில்லிபுத்தூர் 15, விருதுநகர் 2, சிவகாசி 2, பிளவக்கல் 43.20, வத்திராயிருப்பு 24.80, கோவிலாங்குளம் 2.70, வெம்பக்கோட்டை 2, அருப்புக்கோட்டை 8 மி.மீ மழை பதிவாகியது. அதை தொடர்ந்து காலை 11 மணி முதல் தொடர் சாரள் மழை மாவட்டம் முழுவதும் பெய்தது. சில இடங்களில் சாரள் மழை விட்டு, விட்டு பெய்ததால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

The post விருதுநகர் மாவட்டத்தில் காலை முதல் தொடர் சாரல் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: