பொங்கல் பண்டிகைக்காக ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கல்

 

மதுரை, ஜன. 10: தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆவின் நிறுவனம் மூலம் தள்ளுபடி விலையில் நெய் விற்பனை செய்து வருகிறது. மேலும், தற்பொழுது ஆவின் தயாரிப்புகளான வெண்ணெய், பால்கோவா, மைசூர்பா, நறுமணபால், பிஸ்கட், குக்கீஸ், பாதாம்பவுடர், சாக்லெட் ஆகியவை குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இவை அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் பால் பண்ணையில் மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கும்.

பண்டிகை கால சிறப்பு சலுகையாக 1 லிட்டர் நெய்க்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்கள், நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் ஆவின் பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும். ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள், ஐஸ்கிரீம் விற்பனை செய்ய காந்தி மியூசியம், ராஜாஜி பூங்கா, விரகனூர், கூடல்நகர் போன்ற இடங்களில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு விருப்பம் உள்ளவர்கள், ஆவின் விற்பனை மேலாளரை 82203 59559 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

The post பொங்கல் பண்டிகைக்காக ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: