கூட்டுறவு சங்க கூட்டத்தில் செருப்பு, நாற்காலி வீச்சு 2 பாஜ உறுப்பினர்கள் கைது

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் உள்ள திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் 68வது பேரவை கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டறிக்கை புத்தகம் வெளியிடப்பட்டது. பின்னர், உறுப்பினர்களுக்கு பிஸ்கட் கொடுக்கப்பட்டது. அப்போது பாஜவை சேர்ந்த உறுப்பினர்கள், எதற்கு பிஸ்கட் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். திடீரென பாஜவை சேர்ந்த உறுப்பினர் ராமகிருஷ்ணன் நாற்காலியையும், மற்றொரு உறுப்பினரான நாகேந்திரன் செருப்புகளையும் கூட்டத்தில் வீசினர். இதில் நாற்காலி, செருப்புகள் மேலாண் இயக்குனர் மற்றும் மேலாளர் ஆகியோர் மீது பட்டு கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிந்து பாஜவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (47) மற்றும் நாகேந்திரன் (51) ஆகிய இருவரை கைது செய்தனர்.

The post கூட்டுறவு சங்க கூட்டத்தில் செருப்பு, நாற்காலி வீச்சு 2 பாஜ உறுப்பினர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: