ஆனால், அவர் ஏற்க மறுத்து போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த சப்- இன்ஸ்பெக்டர் அருண்குமாரையும் ஆபாசமாக திட்டி, `இங்கிருந்து செல்ல முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்’ என உமாபதி கூறினாராம். அப்போது, அவரை சமாதானம் செய்து அனுப்ப முயன்ற போலீசாரை கீழே தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உமாபதியை திமிரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.தொடர்ந்து, வழக்கு பதிந்து உமாபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post மதுபோதையில் ரகளை போலீசாரை தாக்கிய அதிமுக ஊராட்சி தலைவர் கைது appeared first on Dinakaran.