இதையடுத்து 4 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து அஜீஸ் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் 3 சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதியில் இன்று அதிகாலை வரை சாரல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 30,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர் வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் இன்று காலை தொடர்ந்து சாரல் மழை பொழிந்தது. 5,000 ஏக்கர் சம்பா சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தஞ்சை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, வல்லம், பட்டுக்கோட்ைட, அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இன்று காலை சாரல் மழை பொழிந்தது.
மாவட்டம் முழுவதும் 5,000 ஏக்கர் சம்பா சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. காரைக்கால் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி பகுதியில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக நேற்றிரவு சாரல் மழை பெய்த நிலையில் இன்று காலை மிதமான மழை பொழிந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்யும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று கலெக்டர் கற்பகம் விடுமுறை அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம் துறையூர், தா.பேட்டை, தொட்டியம், முசிறி, சமயபுரம், துவாக்குடி, மணப்பாறை, துவரங்குறிச்சி மற்றும் மாநகரில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இந்த மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்தது.
The post 55 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி மழை நீரில் மூழ்கியது: டெல்டாவில் விடிய விடிய மழை கொட்டியது appeared first on Dinakaran.