குட்கா விற்ற கடைகளுக்கு சீல்

சங்ககிரி, ஜன.9:சங்ககிரி ஆர்.எஸ் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சங்ககிரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் நேற்று போலீசாருடன் சென்று சோதனை நடத்தினார். அப்போது பஸ் ஸ்டாப்பில் உள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் மீது ₹50 ஆயிரம் அபராதம் விதித்து, கடையை பூட்டி சீல் வைத்தார். மேலும், எபினேசர் காலனியில் உள்ள ஒரு கடையில், புகையிலை விற்பனையை கண்டறிந்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.

The post குட்கா விற்ற கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: