சமத்துவ பொங்கல் விழா

ஓசூர், ஜன.9: ஓசூர் அருகே மத்திகிரியில், மாவட்ட காது கேளாதோர் அரங்கில் சமத்துவ பொங்கல் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் சமத்துவ பொங்கல் வைத்தும், பாரம்பரியமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்சுளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. காதுகேளாதோர் உறுப்பினர்கள் நல உதவிகள் வேட்டி, சேலை, சில்வர் பாத்திரங்கள் வழங்கினர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர், தலைவர் சுரேஷ், தமிழ்நாடு காது கேளாதோர் சங்க பொது செயலாளர் மோகன், கிருஷ்ணகிரி காது கேளாதோர் சங்க நிர்வாகிகள் பலராமன், ஜெயவேல், கோவரதன், ஜெய்சங்கர், பிரகாஷ், ஜீவா மற்றும் காது கேளாதோர் மகளிர் அணி காயத்ரி, ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: