இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், எக்ஸ் தளத்தில் முதல்வர் குறித்து அவதூறு பதிவு செய்த நபர் தர்மபுரி மாவட்டம் செல்லியம்பாட்டி – மணிப்பூர் கிராமத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து, சைபர் க்ரைம் போலீசார் தர்மபுரிக்கு சென்று முதல்வர் குறித்து அவதூறு பதிவு செய்த காளியை நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்தனர். எக்ஸ் தளத்தில் இருந்து அவதூறு பதிவுகளையும் போலீசார் நீக்கினர்.
The post முதல்வர் குறித்து அவதூறு நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது appeared first on Dinakaran.