இந்த வகுப்பறை கட்டும் இடத்திற்கு முன்பு இருந்த கனிம வள பாறைகள் வெட்டி எடுத்து கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளுக்கு முன்பு இருந்த கனிம வளபாறை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த பாறையால் பள்ளிக்கு எவ்விதமான இடையூறும் இல்லை. தற்போது அந்த கனிமவள பாறையை வெட்டி எடுத்து அருகிலேயே கொட்டி வைத்து அதிலிருந்து பாறைகளை எடுத்து கடத்தப்பட்டுள்ளது. கனிமவள பாறையை எதற்காக வெட்டி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post பல்லடம் அருகே பொன் நகரில் கனிமவள பாறை வெட்டி கடத்தல் appeared first on Dinakaran.