இந்த நிலையில் நிலநடுக்கத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தள்ளது. உயிரிழந்தவர்களில் 59 பேர் வாஜிமா நகரத்திலும், 23 பேர் சுஸு நகரத்திலும், மற்றவர்கள் ஐந்து அண்டை நகரங்களிலும் பதிவாகியுள்ளனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், குறைந்தது 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜப்பானின் முக்கிய ஹோன்ஷுவின் இஷிகாவா பிராந்தியத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 211 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இதனிடையே இடிந்த கட்டிடங்களின் கீழ் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இஷிகாவா பகுதியில் சுமார் 23,800 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை, 66,400 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் இல்லை. 31,400 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு 357 அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு.. 211 பேரை காணவில்லை!! appeared first on Dinakaran.