டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

சேலம், ஜன.6: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் (20). இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். நேற்றுமுன்தினம் ஊருக்கு செல்வதற்காக டூவீலரில் சேலம் நோக்கி வந்தார். டூவீலரை வாழப்பாடியை சேர்ந்த விக்கி (20) என்பவர் ஓட்டி வந்தார். சேலம் மாசிநாயக்கன்பட்டி பெருமாள் கோயில்மேடு அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது விக்கி உயிரிழந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.தொடர்ந்து சதீஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: