இந்திய கடற்படை விமானம், கடத்தப்பட்ட கப்பல் இருக்கும் இடத்தை நேற்று அதிகாலை கண்டறிந்து அதனை கண்காணித்தது. மேலும், கப்பலுக்குள் உள்ளவர்களை தொடர்பு கொண்டு அவர்களது பாதுகாப்பை உறுதி செய்தது.
மேலும், போர் விமானத்தில் இருந்து ஹெலிகாப்டரை அனுப்பி கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருந்து உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தது. பின்னர், விரைவு படகு மூலம் கப்பலை நெருங்கிய இந்திய கடற்படையின் எலைட் கமாண்டோ பிரிவினர் கயிறு ஏணி மூலம் கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதில் சிக்கி இருந்த 15 இந்திய ஊழியர்கள் உள்ளிட்ட 21 மாலுமிகளையும் மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் மீட்பு நடவடிக்கையின் போது கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் தங்களது முயற்சியை கைவிட்டு தப்பியதாக மீட்பு பணியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 15 இந்தியர்கள் உட்பட 21 மாலுமிகள் பத்திரமாக மீட்பு நடுக்கடலில் கடத்தப்பட்ட கப்பலை அதிரடியாக மீட்டது இந்திய கடற்படை: கடற்கொள்ளையர்கள் தப்பியோட்டம் appeared first on Dinakaran.