இத்திட்டத்தில் பயன்பெற 9 மற்றும் 10ம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை பெற்றோர் ஆண்டு வருமானச்சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவிகளது விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாணவியர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post 9, 10ம் வகுப்பு மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.