இதனால் தெலங்கானாவில் தனிகட்சி தொடங்கிய ஜெகன்மோகனின் தங்கை ஒய்எஸ்.சர்மிளாவை நேற்று காங்கிரசில் இணைத்துள்ளது. அவருக்கு ஓரிரு நாட்களில் முக்கிய பொறுப்பு வழங்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. ஆனால் ராஜசேகரரெட்டியின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் ஜெகன்மோகன், தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்தார். இதனால் காங்கிரஸ் அதிகளவு பாதிப்பை சந்தித்தது. எனவே சர்மிளா மூலம் கட்சியை பலப்படுத்தி ஆந்திராவில் மீண்டும் ஆட்சியமைக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று டெல்லி சென்று ஒய்எஸ் சர்மிளா காங்கிரசில் இணைந்தார்.
அதேவேளையில் நேற்று ஆந்திராவில் இருந்த சர்மிளாவின் கணவர் அனில், திடீரென கடப்பா மாவட்ட தெலுங்கு தேச பொறுப்பாளரும் எம்எல்சியுமான பிடெக் ரவியை சந்தித்து பேசியுள்ளார். சந்திரபாபுவின் `வலதுகரம்’ என குறிப்பிடப்படும் பிடெக் ரவியை, சர்மிளாவின் கணவர் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து தெலுங்கு தேச கட்சியினர் கூறுகையில், வரும் தேர்தலில் காங்கிரஸ்-தெலுங்கு தேச கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக சர்மிளாவின் கணவர் அனில் பேசினார். இந்த சந்திப்பின்போது தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர். இதுகுறித்து இரு கட்சிகளின் மேலிடம் இறுதி முடிவெடுக்கும் என்றனர்.
The post காங்கிரசில் இணைந்த நிலையில் சர்மிளாவின் கணவர் தெ.தேச நிர்வாகியுடன் சந்திப்பு: கூட்டணி அமைய வாய்ப்பு appeared first on Dinakaran.