இந்நிலையில், விண்வெளியில் மின்சார உற்பத்தி செய்ய இந்திய தொடங்கியுள்ளது. விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சாத்திய கூறுகளை கண்டுபிடித்து இஸ்ரோ சாதனை செய்துள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் அனுப்பிய ஃபியூயல் செல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 350 கி.மீ. உயரத்தில் விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் செல்லில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் இருப்பதால் தூய தண்ணீர், வெப்பம் உருவாகும். ஃபியூயல் செல் கருவி இயக்கப்பட்டு 100 வாட் மின்சாரம் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
The post பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் விண்வெளியில் மின்சாரமும், நீரும் தயாரித்து இஸ்ரோ புதிய சாதனை..!! appeared first on Dinakaran.