பாஜ சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா

ஊத்தங்கரை, ஜன.5: ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பாஜ அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் யாத்திரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட துணைத் தலைவருமான ராஜேந்திரன் வரவேற்றார். தொகுதி அமைப்பாளரான முன்னாள் எம்பி நரசிம்மன், நாடாளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவரும், கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தன், ஒன்றிய தலைவர் சிங்காரவேல், இணை அமைப்பாளர் சங்கர், நிர்வாகிகள் சிவா, நமச்சிவாயம், கிரிதரன், அருணாசலம் மகளிரணி விமலா, சுமதி, ராஜேஸ்வரி, கோமதி, சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் நன்றி தெரிவித்தார்.

The post பாஜ சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: