பின்னர் அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் சீனுவாசன், ராதிகாசெந்தில் உள்ளிட்டவர்கள் ஆஜராகி வாதிட்டனர். அப்போது நாட்டார்மங்கலம், ஆரோவில் பகுதியில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதன்தீர்ப்பு வரும்வரை இந்த இருவழக்கிலும் சாட்சிகள் விசாரணை ஒத்திவைக்கவேண்டும் என்று வாதிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 18ம் தேதிவழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதேபோல், விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் எம்பி மீது தொடரப்பட்ட 3 அவதூறு வழக்குகள் விசாரணை மாஜிஸ்திரேட் ராதிகா முன்னிலையில் சி.வி சண்முகம் எம்பி நேரில் ஆஜரானார்.
The post சி.வி சண்முகம் கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.