அரியானா காங். எம்எல்ஏ வீட்டில் ரெய்டு

சண்டிகர்: அரியானாவின் யமுனா நகர் மாவட்டத்தில் குத்தகை காலம் மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும் சட்டவிரோதமாக கற்கள், ஜல்லி மற்றும் மணல் அள்ளியதாக அரியானா போலீசார் பல்வேறு வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில் பணமோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். மேலும் இந்திய தேசிய லோக் தளத்தின் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான வீடு உட்பட சுமார் 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

The post அரியானா காங். எம்எல்ஏ வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: