100% உலக சுகாதார நிறுவனமும், ஐசிஎம்ஆர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கும், மாரடைப்பிற்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லிவிட்டனர். மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எதிர்காலத்தில் நோய் பாதிப்புகள் குறித்து கண்டறிவது தொடர்பாக உலக மருத்துவ மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாடு வருகிற 19, 20, 21 ஆகிய நாட்களில் நடக்கிறது. அதில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, மருத்துவத்துறை பேராசிரியர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.
The post தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எதிர்கால நோய் பாதிப்பு கண்டறிவது தொடர்பாக உலக மருத்துவ மாநாடு: வரும் 19, 20, 21ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.