3 வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி, ஜன.3: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீஸ் ஏட்டு மாது மற்றும் போலீசார் ராயக்கோட்டை- சூளகிரி சாலையில் முகலூர் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவாறு நடுரோட்டில் ரகளை செய்து கொண்டிருந்த 3பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்(28), செல்வம்(34) மற்றும் சின்னப்பையன்(49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: