அந்த மனுவில், உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடைசியாக, கடந்த 2017ம் ஆண்டு விசாரணைக்கு வந்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது முதல்வராக இருக்கக் கூடியவர் மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் தரப்பு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை முடித்து வைக்கக் கோர இருப்பதாக தெரிவித்தது.
The post 61 உயிர்களை பலி கொண்ட மவுலிவாக்கம் கட்டிட விபத்து.. 7 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை : வழக்கை முடித்து வைக்க கோர உள்ளதாக முதல்வர் தரப்பு தகவல் appeared first on Dinakaran.