இதில், ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு போலீசார், அந்த வீட்டில் திடீர் சோதனை செய்தபோது, அங்கு, கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சம்சுதீன் (55), பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், வேலை தேடி வந்த பெண்ணை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சம்சுதீனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கேரள ஆசாமி கைது appeared first on Dinakaran.