கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலத்திற்கு சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் தினந்தோறும் ரேஷன் அரிசியை சென்னை, திருவொற்றியூர், மீஞ்சூர், பொன்னேரி, பஞ்செட்டி, செங்குன்றம், சோழவரம், பெரியபாளையம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி கும்மிடிப்பூண்டி பைபாஸ், எளாவூர் சோதனை சாவடி, கும்மிடிப்பூண்டி பஜார், சத்தியவேடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களை சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து ஒவ்வொரு பெட்டிகளாக ஏரி சோதனை மேற்கொண்டனர் அந்த சோதனையில் கேட்பாரற்று கிடந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசியை அதிரடியாக வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி பறிமுதல் செய்தார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை பஞ்செட்டி பகுதியில் உள்ள உணவுப் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பகல் இரவுகளாக குழு மூலம் ரேஷன் அரிசி கடத்துவதை வட்ட வழங்கல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: