கொரோனாவால் பெண் பலி

திருத்தணி: திருத்தணி நகராட்சி சுப்பிரமணிய நகர் கம்பர் தெரு பகுதியில் வசிப்பவர் கட்டிட மேஸ்திரி குமார். இவரது மனைவி ரெஜினா(43). ரெஜினாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு திருத்தணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் காய்ச்சல் தீவிரமடையவே மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் திருத்தணி தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை ராமாபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ரெஜினா உயிரிழந்தார். பிரேத அறிக்கையில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவமனை இறப்பு சான்றிதழில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உடல் திருத்தணிக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் சமூக வழக்கப்படி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

The post கொரோனாவால் பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: